Page Loader
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 18, 2025
08:55 am

செய்தி முன்னோட்டம்

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக, தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மிதமான மழை பெய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், "நேற்று காலை நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது தென்மேற்கு வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதிகளில் காணப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த அமைப்பால் தமிழகத்தில் நேரடி தாக்கம் இருக்காது. எனினும் ஒரு சில இடங்களில் மிதமழைக்கு வாய்ப்பு உள்ளது" என கூறப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இந்த காற்றழுத்த நிலை காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதோடு, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் சாத்தியம் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை ஏற்படலாம் எனவும் IMD அறிக்கை தெரிவிக்கிறது. தென் தமிழகத்தின் கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில், இடையிடையே 65 கி.மீ. வேகத்தில், சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

OSZAR »