Page Loader
ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம்: மும்பையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்
மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் அருகே, போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன

ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம்: மும்பையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 12, 2024
02:31 pm

செய்தி முன்னோட்டம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கும் தயாராகும் வகையில் மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் அருகே, போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளி முதல் திங்கள் வரை (அடுத்த மூன்று நாட்களுக்கு) மதியம் 1:00 மணி முதல் நள்ளிரவு வரை "விழாவிற்கு வரும் வாகனங்கள்" மட்டுமே இடம் அருகே அனுமதிக்கப்படும். இதன் விளைவாக, பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) உள்ள பல அலுவலகங்கள் ஜூலை 15 வரை WFH முறையில் பணியாற்றுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. மும்பை போக்குவரத்து காவல்துறை, இந்த விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது, வழக்கமான போக்குவரத்துக்கு மாற்று வழிகளையும் வழங்கியுள்ளது.

திருமணம்

திருமண ஏற்பாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

மும்பையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம், இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும். இதில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன், க்ளோ கர்தாஷியன், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், லாக்ஹீட் மார்ட்டின் CEO ஜேம்ஸ் டெய்க்லெட் உட்பட பலதரப்பட்ட உலகளாவிய பங்கேற்பாளர்கள் உள்ளனர். இவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. திருமண ஏற்பாடுகளின் விளைவாகவும், விரிவான அலங்காரங்கள் காரணமாகவும், விழா நடக்கும் இடம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சுற்றி போக்குவரத்து மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

ஹோட்டல் முன்பதிவு

ஹோட்டல்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டன

திருமண நிகழ்ச்சிக்கு முன்னதாக, மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், உயர்தர விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள ஐடிசி, தி லலித் மற்றும் தாஜ் போன்ற ஹோட்டல்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் அவர்களது குழுக்களுக்காக முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. டிரைடென்ட் மற்றும் ஓபராய் ஹோட்டல்கள் ஜூலை 10-14 முதல் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு இரவுக்கு ரூ.10,250 என இருந்த அறை வாடகை, ஜூலை 9 அன்று வரிகள் சேர்த்து ரூ.16,750 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை 15ல் வரிகள் இன்னும் அதிகம். பெரும்பாலான அறைகள் ஜூலை 10-14 வரை புக் செய்யப்பட்டுள்ளன.

OSZAR »